சிறப்பு தரிசன டிக்கெட் - ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்!


சிறப்பு தரிசன டிக்கெட் - ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்!


அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதியில், உலகப் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பரவல் கணிசமாக குறைந்து விட்டதால் பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தனம் படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி முதல் மீண்டும் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையான் தரிசன வசதியை ஏற்படுத்தி கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 8 ஆம் தேதி முதல் ஆன்லைனில் வினியோகம் செய்யப்படும். வரும் 8 ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்னுரிமை தரிசனத்திற்கான டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் தேவஸ்தான இணைய தளத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

ஒரு நாளைக்கு 1,000 டோக்கன்கள் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. டோக்கன் பெற்ற பக்தர்கள் 9 ஆம் தேதி முதல் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Comments

Popular posts from this blog

A FEMININE TOP amp RIPPED JEANS OUTFIT #Top

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்: ஜூன் முதல் வாரம் பதவியேற்பு?1405129604

Beachy Garden Ideas