Posts

Showing posts with the label #suicide

ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை - டாக்டராக முடியாததால் விரக்தி89372734

Image
ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை - டாக்டராக முடியாததால் விரக்தி சென்னை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த மேற்கு காட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருடைய மகன் குமரவேல்(வயது 26). இவர், சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் 2013-ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்தார். மருத்துவ படிப்பு காலத்தை முழுமையாக நிறைவு செய்துவிட்ட நிலையில் 2 பாடங்களில் குமரவேல் தேர்ச்சி பெறவில்லை. இதனால் டாக்டராக முடியவில்லையே என்ற வருத்தத்தில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது. படிப்பு காலம் முடிந்ததும் சொந்த ஊருக்கு சென்ற குமரவேல், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவ கல்லூரியில் சேரும் போது கொடுத்த பள்ளி சான்றிதழ்கள் திரும்ப பெறுவதற்காக தனது தந்தை ஜெய்சங்கருடன், 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். நேற்று முன்தினம் தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதிக்கு குமர