WOOO லண்டன் ஜோடிக்கு விழுப்புரத்தில் திருமணம்1638818528

WOOO லண்டன் ஜோடிக்கு விழுப்புரத்தில் திருமணம்
இந்தியாவில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஆலன் - லியோ இருவரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர், ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆரோவில் வந்தனர். ஆலன் விவசாயப் பணிகளைச் செய்து வந்தார்.
இந்நிலையில், தமிழ் பாரம்பரியத்தின் மீது இந்த ஜோடிகள் ஈர்ப்பைக் கொண்டுள்ளது. இதனால், இவர்கள் தமிழ் திருமண முறைப்படி, வேட்டி, சேலை அணிந்து தாலி கட்டி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமண விழாவில் ஆலன் - லியோவின் உறவினர்கள் பலரும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
Comments
Post a Comment